Monday 28 April 2014
சென்னை,தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோடநாட்டிற்கு
புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள்,
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் முதலமைச்சரை உற்சாகத்துடன்
வழியனுப்பி வைத்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காலை தனி விமானம் மூலம் சென்னையில்
இருந்து கோடநாடு புறப்பட்டார். விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள்
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம்,
பா.வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்களும் மதுசூதனன், தம்பிதுரை உள்ளிட்ட
தலைமைக்கழக நிர்வாகிகளும், ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், வெங்கடேஷ் பாபு,
வேணுகோபால், திருச்சி குமார், கே.என். ராமச்சந்திரன் உள்ளிட்ட மக்களவை
தொகுதி அதிமுக வேட்பாளர்களும், ஏராளமான அதிமுகவினரும் உற்சாகமாக வழியனுப்பி
வைத்தனர்.
தனி விமானம் மூலம் கோவை சென்ற ஜெயலலிதாவை அந்த மாவட்ட அதிமுக
நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோட
புறப்பட்டுச் சென்றார். கோடநாட்டில் சில நாட்கள் தங்கியிருந்து அரசு பணிகளை
மேற்கொள்வார் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment